ஜெய்பீம் பௌண்டேஷன் - நோக்கம்

Jaibhim Foundation (ஜெய்பீம் அறக்கட்டளை) எழுச்சித்தலைவர் டாக்டர்.தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையின் கீழ் இயங்கும் ஓர் அறக்கட்டளை அமைப்பு. இவ்வமைப்பின் நிர்வாக பொறுப்பாளர் மற்றும் செயலாளராக கௌதம சன்னா அவர்கள் இருக்கிறார்.

90களில் உருவான அம்பேத்கரிய பேரெழுச்சியை 21ஆம் நூற்றாண்டில் மீண்டும் உருவாக்கும் மாபெரும் முயற்சியினை முன்னெடுக்கும் செயல்திட்டத்தின் ஓர் அங்கம்தான் Jaibhim Foundation.

சனாதன சக்திகளுக்கு மாபெரும் எதிர்ப்புக் கேடயமாய் அம்பேத்கரியம் ஒவ்வொரு கிராமத்திலும் / பகுதி / முகாம் ஆகியவற்றிற்குக் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்கின்ற பெரும் நோக்கத்தில் அம்பேத்கர் பவுண்டேஷன் என்கின்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அறக்கட்டளையின் செயல் திட்டத்தில் முதன்மை திட்டமாக ஜெய்பீம் 2.0 என்கின்ற திட்டமும், ஜெய்பீம் பதிப்பகமும் உருவாக்கப்பட்டுள்ளன.